400 கிராம் பால் பவுடர் பாக்கெட்டின் விலை 35 ரூபாவால் அதிகரிப்பு
உள்ளூர் பால் பவுடர் விலையை உயர்த்த நுகர்வோர் விவகார ஆணையம் (சிஏஏ) ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, 1 கிலோ உள்ளூர் பால் பவுடர் பாக்கெட்டின் விலை இப்போது ரூ. 945.00. இது முன்னைய விலையை காட்டிலும் ரூ .85.00 அதிகரிப்பு என்று சி.ஏ.ஏ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், 400 கிராம் உள்ளூர் பால் பவுடர் பாக்கெட்டின் விலை ரூ. 345.00 இல் இருந்து ரூ. 380.00 ஆக உயர்த்தபட்டுள்ளது
உள்ளூர் பால் விவசாயிகளை பாதுகாக்கும் நோக்கத்துடன் இந்த விலை உயர்வு ஏற்படுத்தபட்டதாக நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது