Wed. May 15th, 2024

கரணவாய் கிழக்கில் அனுமதிப்பத்திரம் இன்றி மாடு வெட்டிய ஒருவர் இறைச்சியுடன் கைது

02.05.2020 இன்று கரணவாய் கிழக்கில் அனுமதிப்பத்திரம் இல்லாமல் வீட்டில் வைத்து மாடு வெட்டுவதாக நெல்லியடி பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் படி கரணவாய் கிழக்கில் உள்ள ஒரு வீடு  சுற்றிவளைக்கப்பட்டு 20கிலோ இறைச்சியுடன் மாட்டின் தலையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கரவெட்டி சுகாதார பிரிவினரும்  இதன் பொழுது பார்வையிட்டதுடன் சந்தேகநபர் ஒருவர்   பிடிக்கப்பட்டுள்ளார். மற்றையவர் ஓடி மறைந்துள்ளார்.  கைது செய்யப்பட்டவர் விசாரணையின் பின் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உள்ளார். தப்பி ஒடிய  ஒருவர் தற்பொழுது மறைந்து உள்ளார் என்றும் அவரை தபோலீசார் தேடி வருகிறார்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்