மாரடைப்பால் அல்வாய் மனோகரா இளைஞன் உயிரிழந்தார்
மாரடைப்பால் அல்வாய் இளைஞன் உயிரிழந்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இச்சம்பவம் நேற்று இரவு 11.30 மணியளவில் நடைபெற்றது. சம்பவத்தில் அல்வாய் மனோகராவைச் சேர்ந்த 33 வயதுடைய சாந்தரலிங்கம் நிருத்திகன் என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் பற்றித் தெரியவருவதாவது, நேற்று இரவு கடுவையான வயிற்றுவலி ஏற்பட்டதாகவும், இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்ட போது உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட விசாரணையில் மாரடைப்பால் மரணம் நிகழ்ந்துள்ளதாக அறியப்படுகிறது. உடற்கூறு பரிசோதனைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது. இவர் மருதங்கேணி பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.