Sun. Apr 28th, 2024

மாகாணங்களுக்கு இடையில் பயணகட்டுப்பாடுகள் தொடர்ந்து அமுலில்

மேலதிக அறிவிப்பு வரும் வரை மாகாணங்களுக்கு இடையிலான பயண கட்டுப்பாடுகள் அமுலில் இருக்கும் என்று ராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

மாகாணங்களுக்கிடையில் பயண கட்டுப்பாடுகளை எளிதாக்க எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஜூன் 10 அன்று, சுகாதார சேவைகளின் பணிப்பாளர் வெளியிட்ட சுற்றறிக்கை மூலம்
பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்திய பின்னர், குறைந்த எண்ணிக்கையிலான மாகாண பேருந்துகள் மற்றும் ரயில்கள் ஜூலை 14 முதல் அத்தியாவசிய கடமைகளுக்காக இயக்க அனுமதிக்கப்பட்டன.

இருப்பினும் அறிவித்தலுக்கு பிறகு 2 நாட்களுக்கு மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் குறிப்பிட்ட அளவு தளர்த்தப்பட்டு இருந்தபொழுதிலும் அவை மீண்டும் ஆகஸ்ட் 01 வரை நிறுத்தப்பட வேண்டியிருந்தது.

ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை மாகாணங்களுக்கிடையில் வரையறுக்கப்பட்ட பேருந்துகள் மற்றும் ரயில் சேவைகள் இயங்கும் என்றாலும், மேலும் அறிவிக்கும் வரை மாகாணங்களுக்கு இடையிலான இயக்க கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்று தளபதி கூறினார்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்