Tue. Apr 30th, 2024

மன்னார் பேசாலை பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 பேர் கைது

மன்னார் பேசாலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட பேசாலை யூட்ஸ் வீதி பற்றைக் காட்டுப் பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்கள் புதையல் எடுக்க பயன்படுத்திய நவீன கருவி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளது.
பேசாலை பதில் பொலிஸ் பொறுப்பதிகாரிக்குக் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் கடந்த சனிக்கிழமை இரவு 9 மணியளவில் குறித்த பகுதியில் சந்தேகத்திற்கிடமாக புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட அனுராதபுரம் பகுதியைச் சேர்ந்த 4 நபர்களும் பேசாலை பொலிஸ் பிரிவுக்குற்பட்ட    நடுக்குடா மற்றும் வசந்தபுரம் பகுதியைச் சேர்ந்த 2 நபர்களும் பேசாலை பொலிஸரினால் கைது செய்யப்பட்டதோடு, அவர்களிடம் இருந்து நவீன கருவி ஒன்றையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட குறித்த 6 நபர்களும் பேசாலை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரனைக்கு உற்படுத்தப்பட்ட நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை  மன்னார் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதன் போது குறித்த 6 சந்தேக நபர்களையும் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டமை   குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்