Fri. May 10th, 2024

மதுபான நிலையங்களை மறுஅறிவித்தல் வரும்வரை மூடுமாறு உத்தரவு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் உடனடியாக மூடுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு (பி.எம்.டி) தெரிவித்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், மேலதிக அறிவிப்பு வரும் வரை நாட்டிலுள்ள அனைத்து மதுபானக் கடைகளையும் மூட அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு இல்லாத நேரத்தில் மதுபான கடைகள் திறந்த நிலையில் இருக்கவும், மதுபானங்களை விற்கவும் அனுமதிக்கப்படும் என்று கலால் துறை ஞாயிற்றுக்கிழமை அறிவித்து இருந்தது .

இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் நேற்று சில மதுபான கடைகள் திறந்திருந்தன. இதன் பொழுது பாரிய அளவில் மக்கள் முண்டியடித்து சமூக இடைவெளியை பேணாமல் மதுபானம் வாங்குவதற்காக நீண்ட வரிசையில் இருந்துள்ளார்கள்

இதனால் அரசாங்கம் உடனடியாக மதுபான நிலையங்களை மூடுமாறு பணித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்