Fri. May 3rd, 2024

மண்டைதீவு கடற்கரை பகுதியில்  11 கிலோ கஞ்சா மீட்பு சந்தேகத்தில் இருவர் கைது

யாழ் மண்டைதீவு பகுதியில் கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து 111 கிலோ கஞ்சாவையும் மீட்ட கடற்படையினர் அவர்களை ஊர்காவற்றுறை பொலிசாரிடம் கையளித்துள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது மண்டதீவு கடற்பரப்பில் சந்தேகத்துக்கிடமான முறையில் சென்ற படகை  கடற்படையினர் மறித்து சோதனையிட்டுள்ளனர். இதன் போது அதிலிருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் மூட்டைகள் வைக்கப்பட்டிருந்தன அதனை கடற்படையினர் சோதனையிட்டபோது அதில் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் பாசையூர் மற்றும் நாவாந்துறை பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களையும் மீட்கப்பட்ட 111 கிலோ கஞ்சாவையும் ஊர்காவற்றுறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்