மட்டுவிலில் அங்கஜன் ஆதரவாளர்கள் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் மட்டுவில் பகுதியில் முன்னாள் பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முதன்மை வேட்பாளருமான அங்கஜன் ராமநாதன் ஆதரவாளர்கள் சிலர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு தேர்தல் பிரசாரக் கூட்டங்களை நிறைவு செய்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த அங்கஜன் இராமநாதன் ஆதரவாளர்கள் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.