பிரான்ஸ் நாட்டில் பருத்தித் துறை தம்பசிட்டி இளைஞர் உயிரிழப்பு
பிரான்ஸ் நாட்டில் பருத்தித் துறை தம்பசிட்டி இளைஞர் உயிரிழந்துள்ளார். வடமராட்சி பருத்தித்துறை தம்ப சிட்டியைச் சேர்ந்த அழகுசீலன் தாரீஸ் வயது இருபத்தொண்பது என்ற இளைஞர் நேற்று பிரான்ஸ் நாட்டில் உயிரிழந்துள்ளார். பிரான்ஸ் நாட்டில் அகதியாக வசித்து வந்த நிலையில் நேற்றைய தினம் சுகயீனம் கார ணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். தொண்டைப்பகுதியில் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என்று அங்கிருந்து செய்திகள் தெரிவிக்கின்றன.