Sat. Apr 27th, 2024

பாடசாலை விளையாட்டு போட்டிகள் தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளரின் அறிவித்தல்

பாடசாலைகள் விளையாட்டுப் போட்டிகளை ஒத்தி வைக்குமாறு வடமாகாண கல்வி பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அறிவித்துள்ளார்.

தற்போது நிலவிவரும் வெப்பமான காலநிலை காரணமாக பாடசாலைகளில் விளையாட்டுப் போட்டிகள் நடாத்துவதைத் தவிர்க்குமாறு அறிவித்துள்ளார்.
அறிவுறுத்தலுக்கமைவாக கல்வி அமைச்சினால் கடந்த 18ம் திகதி அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திற்கு அமைவாகவும், நாட்டில் தற்போது நிலவிவரும் வெப்பமான காலநிலை கருத்திற்கொண்டு பாடசாலைகளில் நடைபெற்று வருகின்ற விளையாட்டு நிகழ்வுகளை உடனடியாக நிறுத்தி மாணவர்களின் நலனைப் பேணுமாறு வடக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோண் குயின்ரஸ் அவர்கள் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாக பாடசாலை அதிபர்களுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்