Sat. May 4th, 2024

பாடசாலையை கையளித்தல் தொடர்பான அறிவித்தல்

2022.12.30, 31 ஆம் திகதியுடன் ஓய்வு பெறுகின்ற அதிபர்களுக்கு பதிலாக புதிய அதிபர்கள் நியமிக்கப்படும் வரை பாடசாலைகளை கையளிக்கின்ற போது வலயக்கல்விப் பணிப்பாளர்களின் முறையான எழுத்து கடிதத்தில் குறிப்பிடப்படுவரிடமே பாடாசலைகள் கையளிக்கப்பட வேண்டும் என வடமாகாண மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன்குயின்ரஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
வலயக்கல்விப் பணிப்பாளரின் அனுமதியின்றி பாடசாலைகளை தமக்கு விருப்பமானவர்களிடம் கையளித்தல் தொடர்பான நடைமுறை தவறானதாகும்.
பாடசாலை அதிபர்/ஆசிரியர்களின் சிரேஸ்ட நிலையினைக் கருத்தில் கொண்டு இந்நடைமுறையைக் கையாளுமாறு கேட்டுக்கொள்கின்றேன். அத்துடன்
வருட இறுதியாகையால் பாடசாலை நிதி நடைமுறைகளும் பொருட்கணக்கெடுப்பு நடைமுறைகளும் சீராக அமைந்திருக்க வேண்டும் என்பதனையும் கவனத்திற் கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்