பரிசளிப்பு விழாவும் கல்விக் கண்காட்சியும்
பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் நிறுவனர் தினமும் பரிசளிப்பு விழாவும் நாளை சனிக்கிழமை முற்பகல் 8.30 மணிக்கு கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.
இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக வடமாகாண உதவி மாகாண கல்வி பணிப்பாளர் கே.பிறேமகாந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.
நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமையும் மறுநாள் திங்கட்கிழமையும் கல்லூரி கல்விக் கண்காட்சி நிகழ்வும் இடம்பெற்றுள்ளது.
இக் கண்காட்சி நிகழ்விற்கு விருந்தினர்களாக வடமராட்சி வலயக் கல்வி பணிப்பாளர் வை.ரவீந்திரன் வடமாகாண விஞ்ஞான பாட உதவிக் கல்வி பணிப்பாளர் கே.சிவனருள்ராஜா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்னர்.