Thu. May 9th, 2024

சிறப்பான சேவையாற்றிய கரவெட்டி பிரதேச வைத்திய அதிகாரிக்கு பிரியாவிடை

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பொறுப்பு வைத்தியராக  2012 இல் இருந்து கடமையாற்றிய அதே நேரம் கரவெட்டி பிரதேச வைத்தியசாலை யின் வைத்திய அதிகாரியாகவும் கடமையாற்றியவர் வைத்தியர் சுதோக்குமார். அதேநேரம் கரவெட்டி பிரதேச  வைத்திய அதிகாரியாக  முதலாவதாக  பொறுப்பேற்று நெல்லியடி நகர பிரதேசத்தில் ஒரு சிறந்த நிர்வாகத்தை செய்து அதனூடாக அண்மையிலே இதற்கு   மிகச்சிறந்த நிறுவனங்களாக தரச்சான்றிதழ் வடமாகாணத்தில் வழங்கப்பட்டது. இந்தநிலையில்   அவருடைய முயற்சியின் பலனாக வைத்தியசாலையில் புதிதாக இரண்டு மாடிகட்டுவதற்கு நடவடிக்கை எடுத்து உள்ளர். மிகவும் நட்புடன் அனைவருடன் பழகி  அனைவரையும் அன்பாக அரவணைத்து சிறந்த முறையில் வைத்தியத் தொழிலை செய்து  இந்த பிரதேசத்தில் உள்ள  சிறுவர் முதல் வயோதிபர் வரை அனைவருக்கும்  சிறப்பான வகையில் சேவை செய்துள்ளார்.  அவரை பாராட்டி அவருக்கு கரவை அவிபிருத்தி ஒன்றியம் சார்பாக பிரியாவிடை நிகழ்வு இன்று இடம்பெற்றது.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்