தரம் 5 மாணவர்களுக்கு மதிப்பளித்தல் நிகழ்வு
மு/கைவேலி கணேச வித்தியாலயத்தில் தரம் 5 புலமைப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கான மதிப்பளித்தல் நிகழ்வு எதிர்வரும் 29ம் திகதி செவ்வாய்க்கிழமை வித்தியாலய பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
வித்தியாலய முதல்வர் செல்வி. இ.பேரின்பராணி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்விற்கு முதன்மை விருந்தினராக முல்லைத்தீவு கல்வி வலய பிரதிக் கல்வி பணிப்பாளர் திருமதி தாட்சாயினி வஜீகரன் , சிறப்பு விருந்தினர்களாக புதுக்குடியிருப்பு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சி.சுப்பிரமணியேஸ்வரன், முல்லைத்தீவு கல்வி வலய தொழில் வழிகாட்டல் ஆலோசகர் திருமதி சி.ஆனந்தராசா, முல்லைத்தீவு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் சு.சிவாகரன், மதிப்புறு விருந்தினர்களாக கிராம அபிவிருத்தி சங்க தலைவர் வே.லிங்கம், கைவேலி 2ம் வட்டார கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர் செ.மனோகரராசா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்னர்.