Sat. May 11th, 2024

பரபரப்பான ஆட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன் 

அமரர் கு.மதனசுந்தரம் ஞாபகார்த்தமாக வல்வை சன சமூக சேவா தமது பவள விழாவை முன்னிட்டு  நடாத்திய யாழ் மாவட்ட கழகங்களுக்கு இடையிலான கரப்பந்தாட்டத் தொடரில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.
இதன் இறுதியாட்டம் நேற்று வல்வை விளையாட்டரங்கில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணியை எதிர்த்து ஆவரங்கால் மத்திஅணி மோதியது. முதலாவது செற்றில் ஆவரங்கால் மத்தி அணி பலத்த போராட்டத்தில் 25:23 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் இரண்டாவது ஆவரங்கால் இந்து இளைஞர் அணி பலத்த சவாலின் மத்தியில் 28:26 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பதிலடி கொடுத்தனர். மூன்றாவது செற்றில் ஆவரங்கால் மத்தி அணி தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் முகமாக விளையாடி மீண்டும் 25:21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆனால் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 52:21 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அதற்கும் பதிலடி கொடுத்தனர். இதனால் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் ஐந்தாவது செற்றில் இரு அணிகளும் பலப்பரீட்சை நடாத்தினர். இதில் ஆவரங்கால் இந்து இளைஞர் அணி 15:12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுச் சம்பியன் கிண்ணத்தைச் சுவீகரித்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்