வடமாகாண ஆண்கள் ஆசிரியர் அணி அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி
வடமாகாண ஆண்கள் ஆசிரியர் அணி அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி
இலங்கை அரசாங்க சேவை விளையாட்டுச் சங்கம் நடாத்தும் அரச உத்தியோகத்தர்களுக்கான வலைப்பந்தாட்டத் தொடரில் வடமாகாண ஆண்கள் ஆசிரியர் அணி அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இன்று கொழும்பு டொறின்ரன் விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் வடமாகாண ஆண்கள் ஆசிரியர் அணி குழுப் போட்டிகளில் காலி பிரதேச செயலக அணியை 22:0 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும், பாதுகாப்பு உத்தியோகத்தர் அணியை 14:4 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றும் அரையிறுதியாட்டத்திற்குத் தகுதி பெற்றுள்ளது.
இதன் அரையிறுதியாட்டம் நாளை இடம் பெற்றுள்ளது. நாளைய தினம் நடைபெறும் காலிறுதியாட்டத்தில் யாழ் மாவட்ட செயலக அணி வெற்றி பெற்றால் அரையிறுதியாட்டத்தில் வடமாகாண ஆண்கள் ஆசிரியர் அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது