Tue. May 7th, 2024

நெல்லியடி நகர முச்சக்கர வண்டிகளை சோதனைக்கு உட்படுத்திய பொலிஸார்

நெல்லியடி நகர பகுதியில் உள்ள சில முச்சக்கரவண்டிகள், வாடிக்கையாளருக்கு தரமற்ற சேவை வழங்குவதாக பிரதேச சபைக்கு   மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகளை அடுத்து இன்றைய தினம் நெல்லியடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) உட்பட பொலிஸ் அதிகாரிகள் சகிதம் சகல முச்சக்கர வண்டிகளும் பரிசோதனைக்குட்படுத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று 30 முச்சக்கரவண்டிகளில் 12முச்சக்கர வண்டிகள் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பொருத்தமான வண்டிகளுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. குறைபாடுள்ள முச்சக்கரவண்டிகளுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டு மீண்டும் பரிசோதனைக்குட்படுத்தப்பட்டு பாவனைக்கு விடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்