நாளை முதல் பேரூந்து கட்டணங்கள் அதிகரிக்கப்படலாம்
தனியார் பேரூந்துகளுக்கு மானிய அடிப்படையில் எரிபொருள் வழங்காவிடின் நாளை புதன்கிழமை முதல் தனியார் பேருந்து சேவைக் கட்டணம் அதிகரிக்கும் என வடமராட்சி தனியார் பேரூந்து சங்கத்தின் செயலாளர் மனோகரன் தெரிவித்துள்ளார்.
தற்போது டீசல் விலை 111 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று காலை முதல் தனியார் பேரூந்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் சங்கத்தின் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித் அறிவித்துள்ளார்.
இருப்பினும் கட்டணத்தை அதிகரிக்காமல் இன்று எமது சேவையைச் செய்து வருகின்றோம். தனியார் பேரூந்து உரிமையாளர்களுக்கு மானியம் வழங்காவிட்டால் நாளை முதல் 25% தொடக்கம் 35% வீதம் வரை சேவைக் கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.