Thu. Apr 25th, 2024

வறுமைப்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவு வழங்க ஏற்பாடு

மிகவும் வறுமைகுட்பட்ட குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதியினை வழங்குவது தொடர்பாக யாழ் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலங்களினால் வறுமைக்குட்பட்ட மக்களின் விபரங்கள் சேகரிக்கும் செயற்பாட்டினை ஆரம்பித்து விபரங்களை அனுப்பி வைக்குமாறு யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் கேட்டுள்ளார்.

இதில் ஒவ்வொரு பிரதேச

செயலகப் பிரிவிலும் நிரந்தரமாக வசிக்கின்ற குடும்பங்களில்
01.மிகவும் வறுமையான பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் – ( இணைப்பு – 1 )
02 மிகவும் வறுமையான அங்கவீனமுடைய நபர்களையுடைய குடும்பங்கள் – ( இணைப்பு – 11 )
03. மிகவும் வறுமையானதும் 05 ஆங்கத்தவர்களுக்கு மேற்பட்ட எண்ணிக்கையுடையதும, பாடசாலை செல்லும் சிறுவர்களை உள்ளடக்கிய குடும்பங்கள் – ( இணைப்பு -III )
04. மிகவும் வறுமையான 02 அல்லது 02 இற்கு மேற்பட்ட முதியோரை உடைய குடும்பங்கள் ( இணைப்பு IV ) அத்துடன் மேலும் பயனாளிகள் தெரிவில் கிராம மட்டத்தெரிவுக் குழுவில் கிராம உத்தியோகத்தர் , அபிவிருத்தி உத்தியோகத்தர் ( அபிவிருத்தி ) மற்றும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரது  பங்களிப்புடன் பயனாளிகளை தெரிவு செய்தல் வேண்டும். பிரதேச மட்ட சிபார்சுக் குழுவில் CRPA , NCPA , WDO , SDO மற்றும் SSO உறுதிப்படுத்தலுடன் தங்களால் சிபார்சுசெய்து அனுப்பி வைத்தல் வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்