நாளை அரச விடுமுறை இல்லை!! -அரசாங்க தகவல் திணைக்களம்-
நாளை வெள்ளிக்கழமை அரசாங்க விடுமுறை என்று வெளியான தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளது.
அவ்வூடக அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது
2019 ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) அரசாங்க விடுமுறை தினமாக பிரகடன்படுத்தப்பட வில்லை என்று உள்ளக மற்றும் உள்நாட்டலுவல்கள், மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் எச்.எம்.காமினி செனவிரத்ன அறிவித்துள்ளார்.