தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலமாக பாடசாலை வகுப்புகளை நடத்த முடிவு
கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு அமைவாக நாடளாவிய ரீதியில் 20/4/2020 தொடக்கம் தரம் 6,11 வரையான வகுப்புகளுக்கான பாடங்களை தொலைக்காட்சி ஒளிபரப்பு மூலமாக மேற்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது
இதற்கமைவாக நேத்ரா ரீ வி அலைவரிசை ஊடாக ஒளிபரப்புக்கள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன
பாடசாலை ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இது தொடர்பில் உரிய அறிவுறுத்தல்களை வழங்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
இது தொடர்பான தொடர்ச்சியான மேலதிக தகவல்கள் உரிய நேரத்தில் வழங்கப்படுமென யாழ் வலயக் கல்வி அலுவலகம் அறிவித்துள்ளது