தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரி சுவர்ணா உயரம் பாய்தலில் வெண்கலம்
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட பெண்களிற்கான உயரம் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சி.சுவர்ணா வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.
அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட தடகளத் தொடர் கொழும்பு சுகதாஸ விளையாட்டரங்கில் நடைபெற்று வருகின்றது.
நேற்று நடைபெற்ற 14 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான உயரம் பாய்தலில் தெல்லிப்பளை மகாஜனக் கல்லூரியைப் பிரதிநிதித்துவம் செய்த சி.சுவர்ணா 1.49 மீற்ரர் பாய்ந்து வெண்கலப் பதக்கத்தைச் சுவீகரித்துள்ளார்.