தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு.
யாழ் திருநெல்வேலி சந்தியில் உள்ள வர்த்தக நிலையத்தில் வேலைசெய்துவந்த சுதாகரன் சுவீகன்( 19 ) உடையார் கட்டு தெற்கு. புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு எனும் இளைஞனே இவ்வாறு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஊரடங்கு சட்டம் காரணமாக குறித்த வர்த்தக நிலையத்தின் களஞ்சியமாக பயன்படுத்தப்பட்டு வந்த வீட்டில் தங்கியிருந்துள்ளார். 8/4/2020 புதன்கிழமை காலை பொருட்களை எடுப்பதற்காக சென்ற மற்றொரு பணியாளரால் அவதானிக்கப்பட்டு பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. வீட்டில் இருந்த மின்விசிறி ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்ட சடலத்தை மீட்ட பொலிஸார் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுத்துவருவதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்