துன்னாலை வடிவேலர் மண்டபத்தில் மின்ஒழுக்கு
வடமராட்சி துன்னாலைப் பகுதியில் உள்ள வடிவேலர் மண்டபத்தில் மின்ஒழுக்கு ஏற்பட்டதால் தீ விபத்து இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் இன்று காலை 11.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. துன்னாலை அல்லையம்பதி வடிவேலர் மண்டபத்தில் தீ புகை எழுவதை அருகில் உள்ளவர்கள் அவதானித்தனர். ஆலயத்தில் இருந்த தீயணைக்கும் இரசாயணப் பதார்த்தம் மற்றும் மணல் என்பவற்றினைக் கொண்டு தீயை அணைத்துள்ளனர். அதன் பின்னர் மின்சார சபை அறிவிக்கப்பட்டதையடுத்து மின்சாரம் துண்டிக்கப்பட்டதனால் பல கோடி ரூபா பெறுமதியான பொருட்கள் காப்பற்றப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.