நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்துவதற்கு தடை
நெல்லியடி பஸ் தரிப்பு நிலையத்தில் முச்சக்கர வண்டிகளை நிறுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
நெல்லியடி பஸ்தரிப்பு நிலையத்தில் பேரூந்துகள் மட்டுமே நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன் முச்சக்கர வண்டிகளை நிறுத்துவதற்கு நெல்லியடி பொலீஸ் நிலையத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தரித்து நிற்கும் முச்சக்கர வண்டியில் சாரதியைத் தவிர வேறு எவரும் அமர்ந்திருக்க கூடாது எனவும் சாரதிகள் அனைவரும் தமக்குரிய உடைகளுடன் காணப்பட வேண்டும் எனவும் நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி காஞ்சன விமலவீர அறிவுறுத்தியுள்ளார்.