Sat. May 4th, 2024

தமிழர்களின் ஒற்றுமையை குழப்பவே புதிய கட்சிகள் உருவாக்கம்!! -சாடுகிறார் சிறிதரன் எம்.பி-

தமிழ் மக்களின் ஒற்றுமையை திட்டமிட்டு குழப்புவதற்கே இன்று பல கட்சிகள் புதிதாக உருவாக்கப்படுகின்றன என்று பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை நடந்த தமிழரசு கட்சியின் 70ஆம் ஆண்டு நிறைவு விழாவில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தும்போது அவர் மேற்படி குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்:-

ஆரம்ப கால கட்டத்தில் தமிழ் மக்கள் ஒற்றுமையுடன் ஒரு கட்சியின் கீழ் வாழந்தார்கள். இன்று எம்மத்தியில் பல கட்சிகள் புதிதாக தோற்றம் பெற்றுள்ளன.

இது தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்துவதற்காக திட்டமிட்டு சில தரப்பினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடாகவே உள்ளது.

தமிழ் மக்கள் மத்தியில் குழப்பங்களையும் பிரிவினைகளையும் ஏற்படுத்தி பலவீனப்படுத்தும் செயற்பாடாகவே இதனை அனைவரும் பார்க்க வேண்டும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்