Tue. Apr 30th, 2024

தகாத உறவினால் பிறந்த குழந்தை. தாய் மற்றும் உறவினா்கள் சோ்ந்து உயிருடன் புதைத்த குரூரம். மட்டக்களப்பில்.

மட்டக்களப்பு- சந்திவெளி கிராமத்தில் தகாத உறவினால் பிறந்த குழந்தையை வீட்டுக்கு அருகில் புதைத்த பெ ண் தலைமறைவான நிலையில் பெண்ணின் தாய், சகோதாி மற்றும் கணவனின் தாய் கைது செய்யப்பட்டனா்.

இதுபற்றி மேலும் தெரியவருவதாவது,

ஏறாவூர் பொலிஸ் பிரிவின் சந்திவெளி பத்தினி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்த 27 வயதான குறித்த பெண்ணின் கணவர் கடந்த மூன்றரை வருடங்களாக வெளிநாட்டில் தொழில் புரிந்துவருகின்றார்.

இந்த நிலையில் குறித்த பெண் தகாத முறையில் கர்ப்பமாகியுள்ளார் இதனையடுத்து கடந்த 18 நாட்களுக்கு முன் கணவர் வெளிநாட்டில் இருந்து நாடுதிரும்பிய நிலையில்

குறித்த பெண்ணுக்கு பேய் பிடித்ததில் வயிற்றில் கட்டியிருப்பதாக பெண்ணின் கணவரின் தாயார் மற்றும் பெண்ணின் தாயார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவதினமான நேற்று புதன்கிழமை குறித்த பெண்ணின் கணவர் தொழிலுக்கு வெளியில் சென்றுள்ள நிலையில் மாலை குறித்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து

வீட்டில் கணவனின் தாயாரான மாமரியார். பெண்ணின் தாயாரர் சகோதரி ஆகிய மூவரும் சேர்ந்து பிரசவத்தை பார்த்தனர் இதன்போது ஆண் சிசு ஒன்று பிரசுவிக்கப்பட்டுள்ளது

இந்நிலையில் பிரசுவித்த சிசுவை துணி ஒன்றினால் சுற்றிக் கொண்டு கோவிலுக்கு அருகிலுள்ள வெற்றுக் காணியில் கிடங்கு வெட்டி புதைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து பொலிசார் இன்று வியாழக்கிழமை (10) குறித்த பெண்ணின் சகோதரி, தாயார், மற்றும் கணவனின் தாயாரான ( மாமியார்) ஆகிய மூவரை கைது செய்துள்ளதுடன்

குறித்த பெண் தப்பி ஓடி தலைமறைவாகியுள்ளதாகவும். புதைக்கப்பட்ட சிசுவின் சடலத்தை தோண்டுவதற்கு நீதிமன்றத்தின்  அனுமதி  கோருவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இந்நிலையில் இது தொடர்பான விசாரணைகளை ஏறாவூர் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்