ஜூலை மாதத்தில் பாடசாலைகளை திறக்க முடிவு
இந்த மாதத்தில் (ஜூலை ) 100 பிள்ளைகளுக்கு குறைவாகவுள்ள பாடசாலைகளை திறக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜி எல் பிரிஸ் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
சுகாதார அதிகாரிகளுடன் கலந்தாலோசிக்கப்பட்டு அவர்களுடைய வழிகாட்டுத்தலின் படி இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதன் படி நாட்டில் 3000 க்கு கிட்டவுள்ள பாடசாலைகள் இந்த மாதம் திறக்கப்படும் என்று தெரியவருகிறது.