Tue. Apr 30th, 2024

சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை குறிவைக்கும் சஜித் தரப்பு!!

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை தன்பக்கம் இழுக்கும் நடவடிக்கையில் சஜித் பிரேமதாசாவின் தரப்பினர் மும்முரமாக செயற்பட்டு வருகின்றனர்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் பிரதிநிதிகளுக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 40க்கும் மேற்பட்ட தொகுதி அமைப்பாளர்களுக்கும் இடையில் இன்று முற்பகல் பேச்சுவார்த்தை ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

இந்த பேச்சுவார்த்தை நிதியமைச்சர் மங்கள சமரவீரவின் இல்லத்தில் நடைபெற்றுள்ளது.
கோத்தபாய ராஜபக்சவுக்கு ஆதரவளிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக தொகுதி அமைப்பாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

சுதந்திரக் கட்சியின் இந்த தொகுதி அமைப்பாளர்கள் விரைவில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க இணைந்துக்கொள்வார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்