சிறுமியை காட்டுக்குள் இழுந்து சென்று பாலியல் துஸ்பிரயோகம்!! -மேசன் வேலை செய்பவர் தலைமறைவு-
வவுனியாவில் 15 வயது சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் சென்று பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபர் தலைமறைவாகியுள்ளார்.
சிதம்பரபுரம் பகுதியில் நடைபெற்ற இச் சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளது.
இச் சமப்வம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
வவுனியா- சிதம்பரம், கற்குளம் 2 பகுதியில் தாய் வெளிநாடு சென்ற நிலையில் தந்தையும், மகளும் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த சிறுமி அப்பகுதியில் வசிக்கும் மேசன் வேலை செய்யும் ஒரு நபருடன் மிக நீண்ட நாட்களாக நட்புறவுடன் பழகி வந்துள்ளார்.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்று காலை சிறுமியை அந்த நபர் காட்டு பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கு வைத்து அச் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.
சிறுமியின் தந்தை மகளை காணவில்லை என தேடி சென்ற போது காட்டுப் பகுதிக்குள் இருந்து மேசன் வேலை செய்யும் நபர் தப்பியோடியதை தந்தை கண்டுள்ளார்.
இதையடுத்து அயலவர்களின் உதவியுடன் சிறுமி மீட்கப்பட்டு சட்ட வைத்திய பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தப்பித்து சென்றதால் அவரை கைது செய்து விசாரணைகளின் பின்னர் வவுனியா மாவட்ட நீதவான் நிதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.