யோசிதவின் திருமணம் இன்று!! -காலி முகத்திடல் ஹோட்டலில் கோலகலம்-
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாவது மகன் யோசித ராஜபக்ச இன்று திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளுகின்றார்.
இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் காலி முகத்திடலில் உள்ள ஹோட்டலில் அவருடைய திருமணம் நடைபெறுகின்றது.
கடந்த ஜுலை மாதம் குடும்பத்திற்கு நெருக்கமானவர்களுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று கோசித நிதிசா ஜயசேகரவை சம்பிரதாய பூர்வமாக திருமணம் செய்கின்றார்.
திருமண நிகழ்வின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை வீரக்கெட்டிய மெதமுலன வீட்டில் இரண்டாவது நாள் நிகழ்வு இடம்பெற ஆயத்தங்கள் மேற்கொள்ளப்படவுள்ளது.
திருமண நிகழ்விற்கு மஹிந்த ராஜபக்ச தனக்கு மிக நெருக்கமானவர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பலருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.