பளையில் 12 இலட்சம் பெறுமதியான கஞ்சா பொதியுடன் இளைஞர் கைது!!
பளையில் 12 இலட்சம் ரூபா பெறுமதியுடைய 6.6 கிலோகிராம் கஞ்சாவுடன் இளைஞரொருவர் கையும் மெய்யுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கடற்படை புலனாய்வு பிரிவினருக்கு கஞ்சா போதைப் பொருள் கட்டத்தப்படுவதாக இரகசிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மோட்டார் சைக்கிலில் துணிகரமாக கஞ்சாவினை கடத்திய இளைஞர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தாளயடியை சேர்ந்த 21 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன் சந்தேகநபர் பயணித்த மோட்டார்சைக்கிளும் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடற்படையால் கைது செய்யப்பட்ட கைதாகிய இளைஞர் மேலதிக விசாரணைக்காக பளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.