சிறப்புற நடைபெற்ற கச்சதீவு அந்தோனியாா் ஆலய திருவிழா!
புகழ்பெற்ற கச்சதீவு அந்தோனியாா் ஆலய திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக இடம்பெற்றது. இந்நிகழ்வி ல் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டனா்.
நேற்று மாலை 4 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா ஆரம்பமானதுடன் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் தவக்கால யாத்திரையும் திருச்சிலுவை தியானம்,
நற்கருணை ஆராதனை மற்றும் புனிதரின் திருச்சொரூப பவனியும் இடம்பெற்றது. யாழ்.மறைமாவட்ட ஆயர் ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் இன்று காலை 6 மணியளவில்
திருநாள் திருப்பலியினை இந்திய ஆயர்கள் மற்றும் குருக்கள் இணைந்து ஒப்புக்கொடுத்தனர். குறித்த விழாவில் பங்கேற்பதற்காக இந்தியாவிருந்தும் இலங்கையிலிருந்தும்
ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் இந்த ஆலயத்துக்கு வருகை தந்துள்ளனர். இதேவேளை கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்திற்குச் செல்லும் பக்தர்கள்
பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸாருக்கு தேவையான ஒத்துழைப்புகளை வழங்குமாறும் அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.