Sat. May 4th, 2024

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அத்தியட்சகரின் வேண்டுகோள்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலமையைக் கருத்திற்கொண்டு கிளினிக்,வெளி நோயாளர் பிரிவு மற்றும் பற் சிகிட்சை பெற வருவோர் கட்டாயம் வைத்திய ஆலோசனை தேவைப்பட்டால் மாத்திரம் வைத்தியசாலையை நாடவும். கிளினிக் வருவோர் மருத்துவ ஆலோசனை தேவைப்படாதவிடத்து தமது பிள்ளைகளிடம் கிளினிக் கொப்பியைக் கொடுத்து மருந்து மாத்திரைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் பற் சிகிட்சை பெற வருவோர் பல் அடைத்தல் மற்றும் கிளிப் போடுதல் செயற்பாடுகளுக்காக வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்கவும். உயிர் போகும் வலி என்னால் மாத்திரம் வைத்தியசாலையின் பற் சிகிட்சை நிலையத்தை நாடவும். வெளி நோயாளர் பிரிவில் சிகிட்சைக்கு வருவோரும் சாதாரண பிரச்சனைகளுக்காக வைத்தியசாலைக்கு வருவதனைத் தவிர்க்கவும். கொரோனா வைரஸ் பரவல் மற்றும் அதனால் ஏற்படும் தாக்கத்தை உணராத சிலர் பூச்சி மருந்து வாங்குவதற்கு கூட வைத்தியசாலையை நாடுகின்றனர் என வைத்திய அத்தியட்சகர் திருமதி டயாழினி மகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்