கோத்தபாயவின் அதிரடி வாக்குறுதி ,சிறையில் உள்ள இராணுவத்தினர் அனைவரும் நவம்பர் 17 ஆம் திகதி விடுதலை
தவறான குற்றச்சாடுகளினால் சிறைகளில் உள்ள அணைத்து இராணுவத்தினரும் நவம்பர் 17 ஆம்திகதி விடுதலை செய்யப்படுவார்கள் என்று நேற்று அனுராதபுரத்தில் இடம்பெற்ற பொதுஜன முன்னணியின் முதலாவது பிரச்சார கூட்டத்தில் பேசிய ஜனாதிபதி வேட்ப்பாளர் கோத்தபாய ராஜபக்ச அதிரடி தேர்தல் வாக்குறுதி ஒன்றை வழங்கினார்.
முன்னைய அரசாங்கம் விவசாய நடவடிக்கைகளுக்காக அதிக மானியங்களை வழங்கியதாக்வும் , ஆனால் இந்த அரசாங்கம் எல்லாவற்றையும் நிறுத்தி விட்டதாக குற்றம் சாட்டிய அவர், தான் பதவிக்கு வந்ததும் விவசாய நடவடிக்கையை ஊக்குவிக்கவுள்ளதாக குறிப்பிட்டார். மேலும் பேசிய அவர் நாட்டின் கல்வி நடவடிகளைகளை நல்ல நிலலைக்கு கொண்டுவந்து நாட்டை கட்டி எழுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டார்