Wed. May 8th, 2024

கொழும்பில் இருந்து சொந்த ஊர்களுக்கு 370 பேர் அனுப்பி வைப்பு  

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் போக்குவரத்துகள் முடக்கப்பட்டமையால் பலர் தமது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் தங்கியிருந்த 370 பேர் தமது வீடுகளுக்கு நேற்று அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்தக் குழுவில் கர்ப்பிணி பெண்கள், நீண்ட கால நோயாளிகள் மற்றும் சிறு குழந்தைகளும் உள்ளடங்கியிருந்ததாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கமைய, 23 மாவட்டங்களைச் சேர்ந்த குறித்த நபர்கள் பேலியகொடை விஜய குமாரதுங்க அரங்கிலிருந்து, தமது சொந்த ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்