முல்லைத்தீவு கேப்பாபுலவு தனிமைப்படுத்தும் நிலையத்தில் இருந்து இறந்தவரின் உடலை குமாரபுரம் இளைஞர்களின் நிதியில் வவுனியா மின்சார மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முல்லைத்தீவு – கேப்பாப்புலவு தனிமை மையத்தில் பலியான இருவரில் கொரோனா தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்ட சின்னத்தம்பி என்பவரின் உடலை நீதிமன்ற உத்தரவில் குமாரபுரம் கிராம மயானத்தில் தகனம் செய்ய கிராம இளைஞர்கள் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து எதிர்ப்பு வெளியிட்ட இளைஞர்களின் நிதி உதவியில் குறித்த சடலத்தை வவுனியா மின்சார மயானத்தில் தகனம் செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.