பொறுப்பற்று குப்பைகளை கொட்டிவிட்டு பிரதேச சபைக்காக காவலிருக்கும் மக்கள்
வடமராட்சி தெற்கு மேற்கு பிரதேசத்திற்குட்பட்ட விக்னேஸ்வரா பாடசாலைக்குச் செல்லும் வீதி மற்றும் கரணவாய் கலட்டி கிழக்குப் பக்கம் செல்லும் வீதி குப்பை கூடுதலாக காணப்படுவதனால் துர்நாற்றம் வீசுகின்றது. பொதுமக்கள் கூடுதலாக இந்த வீதி ஊடாக செல்வது வழமை என்பதால், கரவெட்டி பிரதேச எப்பொழுது குப்பைகளை அகற்றும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.
தங்களுடய குப்பைகளை கொட்டினால் சரி, இனி பிரதேச சபையின் வேலை என்ற நிலையில் மக்கள் இருப்பதும், இதற்கு அருகில் உள்ள மக்களின் சுகாதாரம் பற்றி யோசிக்காமல், தூர இடத்தில் இருந்து வந்து இந்த இடத்தில் குப்பைகளை கொட்டுவது வருந்த தக்கது என அருகில் உள்ள ஒருவர் கருத்து தெரிவித்தார்.