கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சைக்கு உதவும் சாதனம்.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளாகிய நோயாளர்களின் சிகிச்சைக்கு உதவக்கூடிய சாதனம் ஒன்றை இலங்கை கடற்படையினர் கண்டுபிடித்து வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்களுக்கு சிகிச்சையளிக்க உதவும் ரிமோட் கொண்ரோலர் மூலம் இயக்கக்கூடிய சாதனத்தை ( Medimate) இலங்கை கடற்படைக் குழு கண்டுபிடித்துள்ளது. இதனை நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலைக்கு வழங்கியுள்ளனர்.
இதனால் தூரத்தில் கொரோனா தொற்றுக்குள்ளானோருக்கு சிகிச்சைக்கு உதவும் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதாகவும் வெளியிடப்பட்டுள்ளது.