Fri. Apr 26th, 2024

கரவெட்டியில் இன்று 1800 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கொவிட் 19 நோய்க் கெதிரான 3ம் கட்டதடுப்பூசி ஏற்றும் நிகழ்வானது இன்று  29.07.2021 வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 1800 வரையான பொதுமக்களும் ஆசிரியர்களும் ஏனைய முன்னணிக் களப்பணியாளர்களும் ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட நேர அட்டவணைக்கு அமைவாக வருகை தந்து தடுப்பூசிகளைப் பெற்றுக் கொண்டார்கள்.

மிகவும் ஒழுங்கமைக்கப்பட்ட ரீதியில் அதிகளவு சனநெரிசல் இல்லாமலும் சமூக இடைவெளியுடனும் தடுப்பூசி ஏற்றும் நிகழ்வானது நடைபெற்றது. வாகனங்கள் தரிப்பதற்கு சுகாதாரவைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்னான நிலப்பரப்பு கொடையாளி ஒருவரினால் தற்காலிகமாக வழங்கப்பட்டுள்ளது. சாதாரணமாக தடுப்பூசிபெற்றுக் கொள்வதற்கு 15 முதல் 30 நிமிடங்கள் வரையே செலவு செய்ய வேணடியுள்ளது என பல பொதுமக்களும் மகிழ்ச்சி தெரிவித்தனர். தடுப்பூசி ஏற்றும் நிகழ்வானது தொடர்ந்து நடைபெறவுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பயன் பெறுமாறு சுகாதாரவைத்திய அதிகாரி அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்