கரப்பந்தாட்டத்தில் மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அணி சம்பியன்
வடமராட்சி கல்வி வலய பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பெண்களிற்கான கரப்பந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலை அணி சம்பியன் கிண்ணத்தைக் கைப்பற்றினர்.
இதன் இறுதியாட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.
இறுதியாட்டத்தில் பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் பாடசாலை அணியை எதிர்த்து வட இந்து மகளிர் கல்லூரி அணி மோதியது. ஆட்டம் ஆரம்பம் முதல் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் பாடசாலை அணி 25:10, 25:12 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.