Sat. May 18th, 2024

கரப்பந்தாட்டத்தில் சாதனை படைத்தது பருத்தித்துறை சென்தோமஸ்

வடமராட்சி கல்வி வலய கரப்பந்தாட்டப் போட்டியில் பருத்தித்துறை சென்தோமஸ் றோ.க.பெண்கள் பாடசாலை இரு பிரிவுகளில் சம்பியனாகி சாதனை படைத்துள்ளது.

வடமராட்சி கல்வி வலயப் பாடசாலைகளுக்கு இடையிலான கரப்பந்தாட்டப் போட்டிகள் கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி மைதானத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
16 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான இறுதியாட்டத்தில் பருத்தித்துறை றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணியை எதிர்த்து வல்வை மகளிர் கல்லூரி அணி மோதியது.
ஆட்டத்தில் ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணி 25:16, 25:20 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.
18 வயதிற்குட்பட்ட பெண்களிற்கான இறுதியாட்டத்தில் பருத்தித்துறை றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணியை எதிர்த்து பருத்தித்துறை மெதடிஸ்த பெண்கள் உயர்தரப் பாடசாலை அணி மோதியது. ஆதிக்கம் செலுத்திய பருத்தித்துறை சென்தோமஸ் றோமன் கத்தோலிக்க பெண்கள் பாடசாலை அணி 25:10, 25:16 என்ற புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றினர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்