கணக்கில் இல்லாத 2994 பேர் இன்னமும் சிறைகளில்? அல்லது கொல்லப்பட்டார்களா ?பதில் சொல்லுவாரா கோத்தா ?
கடந்த வாரம் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் சரணடைந்தோர் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான கேள்வி ஒன்றுக்கு ,சரணடைந்த 13,784 பேர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டு விட்டனர் என்றும் வேறு எவரும் சிறைகளில் இல்லை என்றும் கூறி இருந்தார். ஆனால், புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் அளித்துள்ள ஒரு பதிலில், 2009 மே 19ஆஆம் திகதி, 10,790 புலிகள் சரணடைந்தனர் என்றும், அவர்கள் அனைவருக்கும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டது என்றும் கூறியிருக்கிறார். இந்நிலையில் மீதி 2,994 பேருக்கு என்ன நிகழ்ந்தது என்றொரு கேள்வி எழுந்துள்ளது. இதன் மூலம் மீதமுள்ள 2994 பேர் இன்னமும் சியில் உள்ளார்களா அல்லது கொல்லப்பட்டு விட்டார்களா. இதற்கான பதில் நிச்சயமாக கோத்தபாய ராஜபக்சவிடம் இருக்கும்..இதை அவர் வெளிவிடுவாரா?