Sat. May 11th, 2024

கஞ்சாவுடன் மூவர் கைது!!

வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் கேரளா கஞ்சாவுடன் இரண்டு சந்தர்ப்பங்களில் மூவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா புதிய பேருந்து நிலையப் பகுதியில் போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 500 கிராம் கேரளா கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், மாலை புதிய பேருந்து நிலையத்தில் விசேட நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸார் பயணி ஒருவரின் பையில் இருந்து ஒரு கிலோ 900 கிராம் கேரளா கஞ்சாவினை கண்டு பிடித்தனர்.

இதனையடுத்து அதனை உடமையில் வைத்திருந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட மூவரிடமும் விசாரணைகளை முன்னெடுத்துள்ள வவுனியா பொலிஸார் குறித்த நபர்களை நீதிமன்றில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்