Sun. May 12th, 2024

காத்தான்குடி கடற்கரையில் சிரமதானம்!! -இராணுவம் மேற்கொள்கிறது-

மட்டக்களப்பு- காத்தான்குடி கடற்கரை பகுதிகள், படையினரால் தூய்மைப்படுத்தும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு-குருக்கள் மடத்தில் நிலைகொண்டுள்ள 11ஆவது காலாட்படையினரால்,இந்த சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

நாட்டைத் தூய்மையாக வைத்திருக்கும் ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கமைவாக கடற்கரையோரங்களைத் துப்புரவாக்கும் பணி தங்களால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக படையதிகாரிகள் தெரிவித்தனர்.

கடற்கரை தூய்மையாக்கலின்போது கடலலை மூலம் கரையொதுங்கிய கழிவுகளும், அக்கறையின்றி கடற்கரைக்கு வருவோரால் வீசப்பட்ட பிளாஸ்டிக், பொலித்தீன் போன்ற திண்மக் கழிவுகளும் படையினரால் அகற்றப்பட்டன.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்