Sun. May 12th, 2024

சூழலுக்கு பாதிப்பில்லாமல் கருங்கல் அகழ்வு!! -பிரதமர் மஹிந்த அறிவுறுத்தல்-

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் கருங்கல் அகழ்வு அமைய வேண்டும் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.

அரசாங்க காணிகளில் கருங்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்கள் மற்றும் தனியார் காணிகளில் கருங்கல் அகழ்வு தொழிலில் ஈடுபடுபவர்களின் பிரச்சனை தொடர்பில் நேற்று காலை அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்-

கருங்கல் அகழ்வு அனுமதி பத்திரம் வழங்குதல், குத்தகை வழங்குதல் மற்றும் அறவிடுதலின்போது நேரியல் முறையில் குழு அமைக்கப்படும். குழு அறிக்கை இன்னும் இரண்டு வார்ங்களில் பெறப்படும்.

அரசாங்க காணிகளில் மேற்கொள்ளப்படும் கருங்கல் அகழ்வு மற்றும் தனியார் இடங்களில் மேற்கொள்ளப்படும் கருங்கல் அகழ்வுக்கு குத்தகை வழங்குதல் மற்றும் அறவிடுதலின் போது முறையான மற்றும் இலகுவான முறையை ஏற்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளார்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்