ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் 60 தேர்தல் கண்காணிப்பாளர்கள் கடமையில் !
இன்று (22) 9 மாகாணங்களுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 30 பிரதிநிதிகள் ஜனாதிபதி தேர்தல் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவதற்காக செல்லவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் செய்தி குறிப்பில் இவர்கள் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் நீண்டகால கண்காணிப்பில்
ஈடுபடுவார்கள் .
மொத்தமாக 60 தேர்தல் கண்காணிப்பாளர்கள் இதில் ஈடுபடவுள்ளனர். குறுகிய கால கண்காணிப்பில் ஈடுபடவுள்ள 30 பேர் எதிர்வரும் 12 ஆம் திகதி இலங்கை வரவுள்ளனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தை சேர்ந்த கண்காணிப்பாளர்கள் வாக்களிப்பு, வாக்குகளை எண்ணுதல், ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை வெளியிடுதல் உள்ளிட்ட பணிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.