Sat. May 11th, 2024

உடுப்பிட்டியில் இன்று கவனயீர்ப்பு போராட்டம்

அதிபர்,  ஆசிரியர்களின் இன்று உடுப்பிட்டி சந்தியில் நடைபெறவுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் (யாழ்ப்பாணம்) செயலாளர் செ.சிவசுதன் அறிவித்துள்ளார்.
அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாடு
இலவச கல்வியை பாதுகாத்தல்
தேசிய வருமானத்தில் கல்விக்கு 6% ஒதுக்குதல், போன்றனவற்றை வலியுறுத்தி நாடளாவிய ரீதியில் நடைபெறும் போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாக வடமாகாணத்தில் சுழற்சி முறையில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்கொண்டு செல்ல நாங்களும் தீர்மானித்துள்ளோம்.
அந்த வகையில் இன்று  25.10.2021 திங்கட்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு உடுப்பிட்டி சந்திக்கு அருகாமையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தவுள்ளோம்.
அதிபர், ஆசிரியர்களாகிய நீங்களும் அப்போராட்டத்தில் ஒன்றிணைந்து
எம் நியாமான போராட்டத்திற்கு வலுச்சேருங்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்