இஸ்ரேல் சுகாதார அமைச்சர் மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இருவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரெல் சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
இஸ்ரேலில் கொரோனா வைரஸ் தொற்றினால் 25 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.