Sat. Apr 27th, 2024

இலங்கை பாடசாலைகள் கூடைப்பந்தாட்ட மேற்பார்வையாளராக ராஜசீலன்

இலங்கை பாடசாலை கூடைப்பந்தாட்ட சங்கத்தின் மேற்பார்வை உத்தியோகத்தராக வடமாகாணத்தின் உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர்  இ.ராஜசீலன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பதவிக்கால எல்லையாக இரண்டு வருடங்கள் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை கல்வி செயலாளர் கபில பெரேர வழங்கியுள்ளார். கூடைப்பந்தாட்டத்தை வளர்க்கும் நோக்கில் இந்நியமனம் வழங்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களின் நலன் கருதியும் விளையாட்டின் மேம்பாட்டிற்காகவும் இவ் விளையாட்டினை வினைத்திறன் மிக்கதாகவும் , சரியான முறையிலும் வழிநடாத்தி கண்காணிப்பது தங்கள் பொறுப்பாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்